கவிதைகள்



ஏங்குகிறேன்

ஏங்குகிறேன் நீல வானத்தை காண 
வானுயர் கட்டிடங்களை அல்ல 

ஏங்குகிறேன் 'சில்'லென்ற மாலை நேர தென்றல் தீண்ட 
அடைத்து வைக்கும் குளிர் சாதன பெட்டியை அல்ல

ஏங்குகிறேன் தென்றலோடு கலந்து வரும் 'ராஜா'வின் இசைக்கு
 ஹெட் ஃ போனில் ஒலிக்கும் FM அல்ல

ஏங்குகிறேன் தென்னை ஓலைகளுக்கு நடுவில் நிலவை காண
செயற்கைக்கோள் படங்களை அல்ல

ஏங்குகிறேன் சகதியில் நின்று 'ஜோ'வென பெய்யும் மழையில் நனைந்திட
அளந்து வளரும் புல் தரைகளில் அல்ல 

ஏங்குகிறேன் கேள்விகளை தூண்டும் கல்விக்காக
கை கட்டி , வாய் பொத்தி "நல்ல பிள்ளையாக" வளர அல்ல 

ஏங்குகிறேன் ரௌத்திரம் பழகும் பெண்களுக்காக
மறு வார்த்தை பேசாமல் அடங்கி போவர்கள் அல்ல

ஏங்குகிறேன் சிந்திக்கும் சமுதாயத்திற்காக
சில அரசியல்வாதிகளிடம் மயங்குவதை அல்ல 

ஏங்குகிறேன் கிருஷ்ணனும் ராமசாமியும் ஒரே வகுப்பில் அமர
ஏங்குகிறேன் கூரைகள் செங்கற்களாக மாற.




No comments:

Post a Comment